முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

The Children of Heaven

'Children of Heaven' இத் தி ரை க்கவியத்தை செப்டம்பர் 28 ஆம் நாள் பார்த்தேன் என்னை மிகவும் சந்தோச படுத்திய நாளும் இதுவே அழவைத்த நாளும் இதுவே எனது சிறுவயதின் சில நிகழ்வுகளை என்னக்கு காண்பித்த நல்ல திரைகவியம் முடிந்தால் நீங்களும் பாருங்கள்! இத் திரைப்படம் பல்வேறு உலகத் திரைப்பட அரங்கில் விருதுகளை வாரிக்குவித்த படம். கோயிலில் அல்லது திருமண மண்டபத்தில் தொலைத்துவிடுவோமோ என்று நாம் கழற்ற யோசிக்கும் ஒரு 'காலணி(ஷூ)'தான் திரைப்படத்தின் கதாநாயகன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம், அண்ணன் தங்கையான ஒரு சிறுவனையும், சிறுமியையும் பற்றிக் கூறுகிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது. 1997-ம் வருடம் 'மான்டர் உலகத் திரைப்பட விழா'வில் நான்கு விருதுகளைப் பெற்றதுடன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இரானிய திரைப்படமும் இதுவே.

எனக்கு பிடித்ததும் ரசித்ததும்

6 மணிக்கு முன்பு முழிப்பு சோழ கருது சக்கையில் குளிர் காய்வது காலையில் தாத்தா வீட்டு பழைய சோறு பள்ளிக்கு 1 ரூபாய்க்கு இட்லி 20பைசா நொறுக்கு தினிக்கு தேன்மிட்டாய், சூச்பறி, மைசூர் பக்கு, கடலை மிட்டாய், சினி மிட்டாய் இலந்தை பழம், கரப் பழம், இச்சம் பழம், குச்சி ஐஸ், பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், சேமிய ஐஸ், பஞ்சமிருத ஐஸ் காக்கா கடி மிட்டாய் பம்பரம் கோலி குண்டு மணல் வீடு கிச்சி கிச்சி தம்பலம் நொண்டி, பாண்டி கல்லு கூட்டாஞ்சோறு கபடி(மண்ணோட விளையாட்டு) ஐஸ்பைஸ் விளையாட்டு இரவு நேர கண்ணாமூச்சி நொங்கு வண்டி தென்னை மட்டை காத்தடி உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய் கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி பொண்வண்டு பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது பலசரக்கு வியாபாரியின் வண்டியில் நண்பர்களுடன் களவாண்ட சூச்பறி பொட்டலம் மாட்டு வண்டி பயணங்கள் மாட்டை குளிப்பாட்டுவது மாட்டு கொட்டகை சுத்தப்படுத்துவது சந்தை யில் பொங்கல் கரும்பு விற்பது பொங்கலுக்கு ஒருவாரம் முன்பு மாட்டுக்கு சலங்கை கட்டி ரசிப்பது பொங்கலுக்கு போட்டி போட்டு கொண்டு மாட்டை அழகுபடுத்துவது இரவு நேர போதுக் கூட்டம் 10 ஆண்டுகளுக்கு முண்டு...

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை தயவு செய்து விடுங்க: நலம் பெறுங்கள்

கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம் மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்: ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொற...